Skip to main content

சென்னையில் ஆசைவார்த்தை கூறி தனியார் பள்ளி மாணவிகள் கடத்தல்... போக்ஸோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் கைது! 

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

சென்னையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமிகளை ஆசை வார்த்தைகாட்டி கூட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கண்ணகிநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்துவந்த மூன்று மாணவிகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவிகளை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதால் உங்களது பெற்றோரை கூட்டி வாருங்கள் என அந்த மூன்று மாணவிகளிடமும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியள்ளனர். ஆனால் பெற்றோரிடம் இதைக் கூறுவதற்கு பயந்து மாணவிகள் 3 பேரும் மறுநாள் பள்ளிக்கு வராமல் பள்ளி சீருடையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தாக கூறப்படுகிறது.

 

 Two  schoolchildren kidnapping ... arrested in Bokso law for

 

இப்படி தனியார் பள்ளி மாணவிகள் சீருடையில் பள்ளிக்கு செல்லாமல் அதே பகுதியில் சுற்றித் திரிவதை கவனித்து வந்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் கனகராஜ், விஜயகுமார் ஆகிய இருவரும் நோட்டமிட்டு அந்த மூன்று சிறுமிகளிடமும் பேச்சு கொடுத்துள்ளனர். பேச்சுக் கொடுத்த இருவரிடமும் மாணவிகள் 3 பேரும் சகஜமாக பேச ஆட்டோவில் அமரவைத்து அக்கறை கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றனர் அந்த ஆட்டோ ஓட்டுனர்கள்.

இது தொடர்கதையாகி அடுத்த நாளும் அதேபோல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு மாணவிகள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவருடனும் சேர்ந்து சினிமா தியேட்டருக்கு சென்றுவிட்டு பள்ளி விடும் நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். இப்படி இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை, வீட்டிலும் சொல்லவில்லை, ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்னவாகும் என மூன்று மாணவிகளில் ஒரு மாணவி அச்சமடைந்து வீட்டிலேயே இருந்து கொண்டார். ஆனால் மற்ற இரு மாணவிகள் வீட்டைவிட்டு வேறு எங்காவது வெளியே சென்று விடலாம் என்று முடிவெடுத்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர்களின் ஆசை வார்த்தையை நம்பி  கனகராஜ், விஜயகுமாருடன் சென்றுள்ளனர்.
 

 Two  schoolchildren kidnapping ... arrested in Bokso law for

 

இதையடுத்து அந்த இரண்டு மாணவியின் பெற்றோர்கள் கண்ணகிநகர் காவல் நிலையத்தில் மகள்களை காணவில்லை புகார் கொடுத்தனர். காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல்போன இரு மாணவிகளை தேடிவந்தனர். பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த மாணவிகளில் ஒருவரான வீட்டிலிருந்த மாணவியிடம் விசாரணை நடத்தியபோது இந்த தகவல்கள் எல்லாம் வெளியே வந்தது.

அதனை அடுத்து துரைப்பாக்கம் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியபோது மாணவிகள் இருவரும் ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து உறுதிப்படுத்திய போலீசார். ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் மற்றும் விஜயகுமாரின் செல்போன் எண்களின் சிக்னல்களை வைத்து இருவரையும் பின்தொடர்ந்தனர்.

 

 Two  schoolchildren kidnapping ... arrested in Bokso law for

 

சென்னையிலிருந்து மாணவிகளை கும்பகோணம் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் கோவிலில் வைத்து மாணவிகளுக்கு தாலி கட்டி அங்கிருந்து திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளனர். அதனையடுத்து திருப்பூரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த  ஆட்டோ ஓட்டுனர்கள் கனகராஜ், விஜயகுமாரிடம் இருந்து  சிறுமிகளை மீட்டு இருவரையும் கைது செய்தனர்.

இதில் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் ஏற்கனவே திருமணமானவன் என்பது விசாரணையில் தெரியவந்தது. 19 வயதான விஜயகுமார் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவன். பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.