ADVERTISEMENT

தமிழகத்தின் மீது பாஜகவுக்கு வெறுப்பா? தமிழக மக்கள் யார் என்பதை காட்டுவார்கள்: டிடிவி தினகரன் கொந்தளிப்பு

04:03 PM Jun 10, 2018 | Anonymous (not verified)


தமிழகத்தின் மீது பாஜகவுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடுத்த பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உண்மையிலயே தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் கர்நாடகத்திடம் சொல்லி ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்திருக்கலாம். தமிழகத்தின் மீது பாஜகவுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடுத்த பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அம்மாவை போல் ரஜினியை யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அம்மாவின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது.

காவிரி பிரச்னை என்பது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை என்பதால் விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் கலப்பு இன்றி பங்கேற்று உள்ளோம். திமுக தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி. எஸ்.வி.சேகரை கைது செய்யாத காவல்துறையை நினைத்தால் வெட்கக்கேடாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT