ADVERTISEMENT

8 வழிச்சாலைக்கு எதிராக மாபெரும் போராட்டம்: டிடிவி தினகரன்

02:54 PM Jul 12, 2018 | Anonymous (not verified)


8 வழிச்சாலைக்கு எதிராக விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் நல்ல முடிவு விரைவில் வெளிவரும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு வியூகங்களை வளர்த்து வருகிறோம். ஜெயலலிதா வெற்றி பெற்றதைபோல் இந்த முறை தாங்கள் 37 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில், பொன்.மாணிக்கவேல் திறமையாக செயல்படுகிறார். நேர்மையான அதிகாரியான அவர் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சிலை கடத்தல் விவகாரத்தில் இன்னும் யார் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

200 ஏக்கர் நிலத்தை அழித்து 8 வழிச்சாலை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்தை எதிர்த்து விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 8 வழிச்சாலை வேலையை விடுத்து தமிழகத்தில் இருக்கும் சாலைகளை எல்லாம் அகலப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT