Skip to main content

தகுதி நீக்க வழக்கு: உங்களது எதிர்ப்புகளை சபாநாயகர் முன் தெரிவித்தீர்களா? நீதிபதி கிடுக்குப்பிடி கேள்வி

Published on 24/07/2018 | Edited on 24/07/2018


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் அமர்வில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் "18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அதிமுக கொறடா புகார் அளித்த போது, கட்சி முடக்கத்தில் இருந்தது. அதற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமியே சசிகலா அணியில் தான் இருந்தார்.

டிடிவி தரப்பின் மற்றுமொரு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "ஆளுநர் முதல்வரை மாற்ற முடியாது என்பதும், எம்.எல்.ஏ-க்கள் தான் முதல்வரை முடிவு செய்கின்றனர் என்பதும் நன்கு அறிந்த ஒன்றாகும். எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தது, முதல்வர் மீது நம்பிக்கை இல்லை, அதனால் முதல்வருக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்தோம்.

எடியூரப்பா வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள் செய்ததையே நாங்களும் செய்தோம். அவர்கள் செய்தது சரி என்றால், நாங்கள் செய்ததும் சரிதான். கட்சியின் அப்போதைய துணைப்பொதுச் செயலாளர் தினகரனின் அனுமதியோடு தான் கவர்னரை சந்தித்து முதல்வருக்கு எதிராக புகார் அளித்தோம். ஆனால் கர்னாடகாவில் நடந்ததை போல இங்கு எதிர்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறாகும். நாங்கள் முதல்வருக்கு எதிராக செயலட்டாலும், அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம்.

 

 

அப்போது நீதிபதி சத்தியநாராயணன்.... முதல்வருக்கு எதிராக புகார் அளிப்பது அரசுக்கு எதிராக அல்ல என கூறுகிறீர்களா??? என்றார்.

வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆமாம். எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்திக்க உரிமை உள்ளது.

மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் "சசிகலா சிறை சென்றபின் அணி மாறிய முதல்வர், அதன்பின்னர் பன்னீர் செல்வம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் கட்சி விவகாரம் நிலுவையில் இருந்தபோது தகுதிநீக்க உத்தரவை சபாநாயகர் பிறப்பித்ததே தவறு. தேர்தல் ஆணைய முடிவு வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அதிமுக இல்லாத சமயத்தில், சபாநாயகரிடம் அளித்த புகாரில் அதிமுக கொறடா என்றே புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்... ஆளுனரிடம் அளித்த புகாரிலும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர் என்றார்.

அப்போது நீதிபதி சத்தியநாராயணன்..... உங்களது எதிர்ப்புகளை சபாநாயகர் முன் தெரிவித்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் தனபால் தரப்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் " சபாநாயகரிடமும் தெரிவிக்கவில்லை. தலைமை நீதிபதி அமர்விலும் தெரிவிக்கவில்லை. அப்போது விவாதிக்கப்படாத விஷயத்தை இப்போது எழுப்ப முடியாது என்றார்.

இதையடுத்து, தகுதி நீக்க செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு வாதங்கள் இன்று முடிந்தது. சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் நாளையும் வெள்ளிக்கிழமையும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.