தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் நகரில் பெரியார் காலனியில் வசிப்பவர் சிறுமணி என்பவரின் மகன் சோலைராஜ் (23). இவரும் அந்த பகுதியில் உள்ள அழகர் என்பவரின் மகள் பேச்சியம்மாள் (19) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சோலைராஜும் பேச்சியம்மாளும் திருமணம் செய்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த காதல் தம்பதியர் பெரியார் காலனியில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இரண்டு உட்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் திருமணத்தை பேச்சியம்மாளின் தந்தை அழகர் உட்பட அவரது உறவினர்கள் அனைவரும் எதிர்த்து வந்தனர். இதனிடையே இன்று அதிகாலை 1.30 மணியளவில் தம்பதியரான சோலைராஜுயும் அவரது மனைவி பேச்சியம்மாளையும் ஒரு கும்பல் வெட்டிக்கொன்றது. தம்பதியர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவலறிந்த குளத்தூர் காவல்நிலைய அதிகாரிகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய குற்றவாளிகளை தேடியும் வருகின்றனர். இதனிடையே சோலைராஜின் உறவினர்கள் குற்றவாளிகளான பெண்ணின் உறவினர்களை கைது செய்ய வேண்டும். ஏனெனில் பெண்ணின் உறவினர்கள்தான் படுகொலைக்கு காரணம் அவர்கள்தான் இந்த திருமணத்தை எதிர்த்து வந்தனர். அவர்களை கைது செய்யும் வரை இருவரது உடல்களையும் வாங்கமாட்டோம் என்று தூத்துக்குடி மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய குற்றவாளிகளை தேடியும் வருகின்றனர். இதனிடையே சோலைராஜின் உறவினர்கள் குற்றவாளிகளான பெண்ணின் உறவினர்களை கைது செய்ய வேண்டும். ஏனெனில் பெண்ணின் உறவினர்கள்தான் படுகொலைக்கு காரணம் அவர்கள்தான் இந்த திருமணத்தை எதிர்த்து வந்தனர். அவர்களை கைது செய்யும் வரை இருவரது உடல்களையும் வாங்கமாட்டோம் என்று தூத்துக்குடி மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments