Skip to main content

தூத்துக்குடியிலும் மாவுக்கட்டு... தொடர் கொலை சம்பவத்திற்கு புல் ஸ்டாப்! 

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் விவேக் வயது 37, இவரும் அங்குள்ள சிவந்தகுலம் பகுதியை சேர்ந்த முருகேசன் வயது 35 இருவரும் நண்பர்கள்.15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் இருவரும் இருசக்கர வாகனத்தில் காமராஜ் கல்லூரியின் சாலை அருகே சென்றபோது டூவீலர்களில் அவர்களை வழிமறித்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியது. 

 

 Mavukattu in Thoothukudi..  Bull Stop for the serial incident


அண்மையில் தூத்துக்குடியில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் தூத்துக்குடி டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலனின் நேரடி கண்காணிப்பில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. மரணமடைந்த இருவரும் சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் வேகமாக சென்றவர்களை கண்டித்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி விரோதமாக மாறி கொலையில் முடிந்திருக்கிறது இந்த சம்பவம்.

 

 Mavukattu in Thoothukudi..  Bull Stop for the serial incident


இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொலை குற்றவாளிகள் இருந்த இடத்தை கண்டறிந்து சுற்றிவளைத்து 5 பேரை கைது செய்துள்ளனர். ஆனால்  வழக்கம்போல கைது செய்யப்பட்டவர்களின் கை, கால் உடைந்து மாவுக்கட்டுடனான புகைப்படங்கள் வெளியானது. தாங்கள் சுற்றிவளைத்ததை சுதாரித்துக்கொண்ட அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பமுயன்றபோது இருசக்கர வாகனம் சறுக்கி கீழே விழுந்தனர். வழுக்கி விழுந்த மாரிமுத்து, அருண், மாரிச்செல்வம் ஆகிய மூன்று பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து கை, கால்களில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்தோம் என போலீசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 Mavukattu in Thoothukudi..  Bull Stop for the serial incident


கைது செய்யப்பட்ட 5 பேரில் மூன்று பேருக்குத்தான் மாவு கை, கால் முறிந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. அந்த மூன்று பேரும்தான் அந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக அரிவாளை கைகளில் ஏந்தியவர்கள் என்பதுதான் இங்கு ஹைலைட்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.