Skip to main content

தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் மரணித்த சம்பவத்தில் திகில் திருப்பம்...  நடந்தது படுகொலை

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் பக்கமுள்ள அயன் பொம்மையாபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள் ஜோதிமுத்து, ரத்தினராஜ் சகோதரர்கள். இருவரும் லாரி டிரைவர்கள்.

மூத்தவர் ஜோதிமுத்துவிற்கு உஷாராணி, மகாலட்சுமி என இரண்டு மனைவிகள். மூத்த மனைவி உஷாராணிக்கு சீமைன் அல்போன்ஸ் ஜீசஸ் (14) என்ற மகனும் ஜாக்குலின் ரோஸி (13) என்ற மகளும் உள்ளனர். சீமைன் அல்போன்ஸ் விளாத்திகுளத்தில் 7ம் வகுப்பு பயில்பவன். 2ம் மனைவி முத்துலட்சுமியின் மகனான எட்வின் ஜோசப் (9) தனியார் பள்ளியின் 3ம் வகுப்பு மாணவன்.

சகோதரர்கள் ஜோதிமுத்துவுக்கும், ரத்தின ராஜூக்குமிடையே குடும்பப்பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மறுபடியும் தகராறும் ஏற்பட்டிருக்கிறது.

 

incident in tutucorin


இதனிடையே நேற்று முன்தினம் சிறுவர்களான சீமைன் அல்போன்ஸ், எட்வின் ஜோசப் இருவரும் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றனர். நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவர்கள் கிணற்றில்  மூழ்கி இறந்தது தெரியவர தீயணைப்பு படையினர் சிறுவர்களின் உடலை மீ்ட்டனர். இது குறித்து டி.எஸ்.பி. முகைதீன், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை விசாரித்தனர். அப்போது சிறுவர்களை ரத்தினராஜ் அழைத்துச் சென்றது தெரியவர, தலைமறைவாகிப் போன ரத்தினராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணை வாக்கு மூலத்தில் ரத்தினராஜ் தெரிவித்தது விசாரணை அதிகாரிகளையே விறுவிறுக்க வைத்துவிட்டது. ரத்தினராஜ் வாய் திறந்தது இந்தப் பயங்கரம் தான்.

 

incident in tutucorin


என் அண்ணன் ஜோதிமுத்துவுக்கும் உஷாராணிக்கும் 2005ல் திருமணம் நடந்தது உஷாராணியின் தங்கை மகாலெட்சுமியை நான் திருமணம் செய்ய நினைத்தேன். நான் குடிகாரன் என்பதால் திருமணம் செய்து வைக்க மறுத்தனர். ஆனால் மகாலெட்சுமியை அவரது பெற்றோர் எனது அண்ணனுக்கு 2வதாக திருமணம் செய்து வைத்ததால் நான் ஆத்திரமானேன். நான் விரும்பிய பெண்ணை அண்ணன் மணமுடித்ததால் வேதனை எனக்கு. அதனால் அவரோடு எனக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் நான் குடித்து விட்டுத் தகராறு செய்வதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எனது மனைவி அவளது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

தொடர்ந்து எனக்கும் அண்ணனுக்கும் தகராறு நடந்தது. ஆத்திரமான நான், எனது அண்ணன் மகன்களை நீச்சல் கற்றுத் தருவதாக அழைத்துச் சென்று முதலில் எட்வின் ஜோசப்பை கிணற்றில் தள்ளி விட்டுப் பின் சீமைன் அல்போன்ஸை தள்ளி விட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விட்டேன்.

என்று சலனமில்லாமல் சொல்லியிருக்கிறான் ரத்தினராஜ். விசாராணைக்குப் பின் போலீசாரால் ரீமாண்ட் செய்யப்பட்டான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.