ADVERTISEMENT
சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே உள்ள சமுதாய நல கூடத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மயிலாப்பூர் மாவட்டம் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தினர். இதில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவரது மனைவியுடன் கலந்துகொண்டு வளைகாப்பு நடத்தி, சீர்வரிசைகள் வழங்கினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments