ADVERTISEMENT

பட்டப்பகலில் பச்சிளங் குழந்தை கடத்தல்...  சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

04:45 PM Oct 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை அரசு மருத்துவமனையில் தாயை பார்த்துக்கொள்வதுபோல் பாசாங்கு செய்து, தாய் கழிவறை சென்றபோது குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தநிலையில் தற்பொழுது இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் பெண் ஒருவர் சாவகாசமாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் குழந்தையைக் கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

45 வயது மதிக்கத்தக்க அந்த பெண் கையில் உள்ள பையில் குழந்தையைப் போட்டு எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் மருத்துவமனை வளாகத்தில் குழந்தையைப் பையில் போட்டு எடுத்துக் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ள போலீசார் அந்த பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT