Skip to main content

ஆதரவு தருவதாகக் கூறி கட்டைப் பையில் குழந்தையைக் கடத்திய பெண்... தஞ்சையில் பரபரப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

child incident excitement in Tanjore!

 

காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டார் ஆதரவும் இல்லாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதுபோல நடித்து மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனை. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் சிக்கலான கர்ப்பிணிப் பெண்களையும், பிரசவம் நடந்த பிறகு சிக்கலாகும் தாய் மற்றும் குழந்தைகளையும் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு போனால் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் இன்றளவும் உள்ளது. அங்குதான் அடிக்கடி குழந்தை திருட்டுகளும் நடப்பது வேதனையளிக்கிறது.

 

தஞ்சை பர்மா காலனி பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி குணசேகரன் (வயது 24). ராஜலட்சுமி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு வீட்டார் ஆதரவும் இல்லாமல் இருந்துள்ளனர். ராஜலட்சுமி கர்ப்பமானது முதல் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டார்.

 

child incident excitement in Tanjore!

 

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கணவர் குணசேகரன் அவரது மனைவியை தஞ்சை ராசாமிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

ராஜலட்சுமி தனியாக இருப்பதைப் பார்த்த ஒரு பெண், ''உனக்காக யாரும் வரலையா? நான் உங்க அம்மாபோல இருந்து பார்த்துக்கிறேன்'' என்று கூறி 4 நாட்களாக கூடவே இருந்தவர். வெள்ளிக்கிழமை நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன். நீ குளித்துவிட்டு வா என்று ராஜலட்சுமியை குளிக்க செல்லுமாறு அனுப்பியுள்ளார். ராஜலெட்சுமியும் அவர் பேச்சை நம்பி குளித்துவிட்டு வந்து பார்த்தபோது அவரது பெண் குழந்தையை காணவில்லை. கதறி அழுதுகொண்டே கணவருக்கு தகவல் சொல்ல மருத்துவமனை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

 

child incident excitement in Tanjore!

 

அதன் பிறகு மருத்துவமனை சிசிடிவி கேமராக்களில் பார்த்தபோது ராஜலட்சுமிக்கு ஆதரவாக இருந்த பெண் குழந்தையை பச்சைநிற கட்டைப் பையில் வைத்துக் கொண்டு வெளியேறுவது தெரிந்தது.

 

இது குறித்து டி.எஸ்.பி கபிலன் தலைமையில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் குழந்தையை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர். சில வருடங்களாக கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி பாதுகாப்பு வைக்கப்பட்டிருப்பதால் குழந்தை கடத்தல் குறைந்திருந்த நிலையில், மீண்டும் குழந்தை திருட்டு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.