Skip to main content

புதுவையில் பெட்ரோல் பங்க் ஊழியரைக் கடத்தி, சேற்றில் முக்கிக் கொலை!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

incident in puducherry... police investigation

 

புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் பிரகாஷ்(25). இவர் மேட்டுப்பாளையம் பான்லே பூத் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.


இந்த நிலையில், நேற்று காலை பிரகாஷ் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, 4 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் பிரகாஷை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக அமர்த்தியுள்ளனர். அப்போது, தடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி, கடத்திச் சென்றுள்ளது அந்த கும்பல். இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மீட்டு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதையடுத்து (வடக்கு) காவல் கண்காணிப்பாளர் சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்(பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

பின்னர், பெட்ரோல் பங்க் மேலாளரிடம் புகாரை பெற்று 364 பிரிவின் கீழ் (கொலை செய்யும் நோக்கில் கடத்தல்) வழக்குப் பதிந்த போலீசார் அருகிலுள்ள வில்லியனூர் மற்றும் கோரிமேடு காவல் நிலையங்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து கடத்தப்பட்ட ஜெயப்பிரகாஷை மீட்க விடிய விடிய போலீசாரும், ஜெயப்பிரகாஷின் உறவினர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


இதனிடையே, ஊசுட்டேரியை ஒட்டிய பொறையூர் ரோட்டிலுள்ள காலி மனையில் சேற்றில் முக்கி, தலையில் கல்லைப் போட்டு ஜெயப்பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதையறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு சென்று பிரகாஷின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

 

விசாரணையில், ஜெயப்பிரகாஷுக்கும், சண்முகாபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன்(25) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு, அங்குள்ள சாராயக் கடையில் பிரச்சனை ஏற்பட்டு, மோதலில் முடிந்ததும், அதனைத் தொடர்ந்து இருவரும் அவ்வப்போது செல்ஃபோனில் மிரட்டல் விடுத்துப் பேசி வந்ததும் தெரியவந்தது. மேலும், கடத்தப்பட்ட ஜெயப்பிரகாஷ் பணியாற்றிய பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

 

cnc

 

அதனைத் தொடர்ந்து சபரிநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் டெம்போ ராஜா(24), டெம்போ ராஜாவின் உறவினரான  மார்த்தான்(23), முத்தியால்பேட்டை எலி கார்த்திக்(26) ஆகியோரை போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். இதனிடையே ஜெயப்பிரகாஷின் சடலம் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது


இரண்டு நாட்களுக்கு முன்புதான் அஜித் என்பவரை எதிர்த்தரப்பு கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்தக் கொலை நடைபெற்று இருக்குமா என்று காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்