ADVERTISEMENT
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. முன்னதாக, தீர்ப்பு வழங்கப்படும்போது ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மக்கள் கூடுகின்ற பொதுஇடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையம் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT