வருமான வரித்தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் அதிகளவில் வருமான வரி செலுத்தியவர்கள் மற்றும் வருமான வரித்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (24/07/2022) காலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் அதிகளவில் வருமான வரிச் செலுத்திய நான்கு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.