ADVERTISEMENT
சென்னை மண்டல அளவில் தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
ADVERTISEMENT
சென்னை தி. நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் இளைஞர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் வீணா ஆர் சீனிவாஸ் மற்றும் தபால் துறை சென்னை மண்டலம் இயக்குநர் கே. சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Show comments