ADVERTISEMENT

கோவையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி... இளைஞர் கைது!

03:41 PM Jun 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடிக்க மர்ம நபர் முயற்சித்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும்போது ஹைதராபாத்தில் இருந்த வங்கி மேலாளரின் செல்ஃபோனுக்கு அலாரம் சென்ற நிலையில், வங்கி மேலாளர் உடனடியாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சி.சி.டி.வி காட்சிகள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி தேடிவந்த நிலையில், கொள்ளை முயற்சி தொடர்பாக மதுபோதையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக அருணகிரி என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஏடிஎம் டெபாசிட் மையத்தில் நடைபெற்ற கொள்ளைகள் தொடர்பாக நேற்று (23.06.2021) ஹரியானாவில் ஒருவர் கைது செய்யப்பட்டு, 3 பேரை தேடிவரும் நிலையில் கோவையிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT