கோவை வெள்ளலூர் கனரா வங்கி ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வெள்ளலூரில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் இன்று மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். ஏடிஎம் மையத்தில் இருந்த வயரை துண்டித்து சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்துள்ளனர். அப்போது அலாரம் ஒலித்தது. அலாரம் அடித்ததால் தப்பிச் சென்ற கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் ஏடிஎம்மில் கொள்ளை மேற்பட்ட நபர்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.