ADVERTISEMENT

சைக்கிள் ஓட்டிய அர்ஜுன் சம்பத்

10:17 AM Sep 10, 2018 | manikandan


பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து நாகா்கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜீன் சம்பத் சைக்கிள் ஓட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள மூன்று முக்கிய கோவில்களில் கொள்ளை நடந்துள்ளது. திருட்டு போன சிலைகள் குறித்து புகார் கூற அறநிலையத்துறை அவசரம் காட்டாததன் பின்னணி என்ன? குமரி மாவட்டத்தில் திருட்டு போன சிலைகள் குறித்து பொன்மாணிக்கவேல் தலைமையிலான டீம் விசாரிக்க வேண்டும்.

ADVERTISEMENT

காவல்துறை கண்காணிப்பாளா் கட்டுபாட்டில் இருக்கும் திருக்கோவில் பாதுகாப்பு படைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்த மத்திய மாநில் அரசுகள் ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வரவேண்டும். பெட்ரோல் விலை உயா்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி தனியாக போராட்டம் நடத்தும். பெட்ரோலுக்கு பதில் எத்தனல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT