Skip to main content

’புனிதம் கெடும்!’- பதறும் அர்ஜூன் சம்பத், ‘புனிதம் கெடாது’ - மதுரை ஆதீனம் ஆணித்தரம்

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
ar

 

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.   சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பினால் ஐயப்பன் கோவிலின் புனிதம் கெடும் என்று அர்ஜூன் சம்பத் பதறுகிறார். ஆனால், மதுரை ஆதீனம் அருணகிரி நாதரோ, புனிதம் கெடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார்.


இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ’’உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிக தீர்ப்பு. ஐயப்பன் மீதுபக்தி இல்லாத சில பெண்கள் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உண்மையான ஐயப்ப பக்தர்கள் ஏற்க மாட்டார்கள்.  ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு வழிபாட்டு முறை இருக்கிறது.  மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.   இந்து மத்திற்கு எதிரானவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த வழக்கில் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வைகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.     ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் உள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிமலை தேவஸ்தானம் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’என்று  தெரிவித்துள்ளார்.  

 

  மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்,    ‘’சம உரிமையை கொடுத்திருக்கிறது இந்த தீர்ப்பு.  பெண்களும் இறைவனை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.   ஆண்களை விட பெண்கள்தான் திருக்கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதில் தீவிரமாக இருக்கிறார்கள்.   திருவிழக்கு பூஜை, பஜனை என்று திருக்கோவில்களில் பெண்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

 

சபரிமலைக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் என்று நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேன்.  பாகுபாடு பார்க்காமல் அனைத்து வகையான பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிப்பதுதான் நியாயமானது.  இதில் கோயிலின் புனிதன் கெடுவதற்கு எந்த வகையான வாய்ப்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்.  

 

மாதவிலக்கு பெண்களால் புனிதம் கெடும் என்கிறார்கள்.  மாதவிலக்கு பெண்கள் கோவிலுக்கு வருவதை எப்படி சோதனை செய்வீர்கள்?  பெண் காவலர்களை நியமிப்பீர்களா?  இதில் ஏமாற்றிச்செல்லக்கூடிய பெண்கள் இருக்கலாம் அல்லவா?   அதனால் வயது வரம்பு பார்க்காமல் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தீர்ப்பு கொடுத்திருப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுபவத்தை, ஆற்றலை, முதிர்ச்சியை காட்டுகிறது.   கோயிலின் புனிதம் கெடாது என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.  ஒன்றரை ஆண்டுகள் விசாரணை நடத்தி   அனுபத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை உண்மையில் பாராட்டுகிறேன்’’ என்று  தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென வந்த டூப் மோடி; கஸ்தூரி கொடுத்த பகீர் பேட்டி; அப்செட் ஆன அர்ஜுன் சம்பத்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இந்து மக்கள் கட்சி நடத்திய  பாஜக ஆதரவு கூட்டத்தில் 'திமுக கூட்டணி தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என  நடிகை கஸ்தூரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம் கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை அவர் வரவில்லை.

Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இதனிடையே பிரதமர் மோடி வருகிறார் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது மோடி போன்ற வேடமிட்டு நபர் ஒருவர் கையை அசைத்தபடி மேடைக்கு வந்தார். இறுதிவரை கஸ்தூரி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் நிற்க ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. ஆனால் இறுதியாக கூட்டம் முடிந்த பின் சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த நடிகை கஸ்தூரி அர்ஜுன் சம்பத் உடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அவர் பேசியதாவது, 'திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார்.

கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் கூட்டத்திலிருந்து எதுவும் சொல்லாமல் அப்படியே பின்னோக்கி சென்றார்.

Next Story

அர்ஜூன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Madurai police summon Arjun Sampath

 

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவருடைய கணவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, சுமதி அந்த பகுதியில் பால்பண்ணை வைத்து வியாபாரம் செய்து வந்தார். 

 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சுமதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதில், அதிர்ச்சியடைந்த சுமதி தனது வீட்டிலேயே மயங்கி விழுந்தார். குண்டு சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் மயங்கிய நிலையில் இருந்த சுமதியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

இதற்கிடையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “பெருகிவரும் ஆயுதக் கலாச்சாரம்! சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு! திமுக ஆட்சியில் அச்சத்தில் மக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இதையடுத்து,பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுமதிக்கும், அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறினால் தான் இந்த சம்பவம் நடத்தப்பட்டது என்று தெரியவந்தது. எனவே, குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதை சட்டம் ஒழுங்கு பிரச்சனை போல் பதிவிட்டிருந்த அர்ஜூன் சம்பத்தை, செக்கானூரனி காவல் நிலையத்தில் நாளை நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. சம்மன் அனுப்பி உள்ளார்.