ADVERTISEMENT

அரியலூரில் மூன்று மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி.

05:39 PM Sep 25, 2019 | Anonymous (not verified)

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் ஜெகன்(14), சுப்பிரமணியன் மகன் ஆணைமுத்து(14) இருவரும் துக்கபுரம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். மருதமுத்து மகன் அன்பரசன்(13) அதே கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, விடுமுறை நாட்களாக இருப்பதால் நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

அப்போது, மாணவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து 3 மாணவர்களின் உடல்களும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குளத்தில் அண்மையில் தூர்வாரும் பணி நடந்துள்ளது. இதனால், குளத்தில் ஆழம் தெரியாமல் மாணவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் இறப்பு குறித்து செந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர். கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 10 சிறுவர்கள் இறந்துள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT