Woman who went for abortion with boyfriend ... Complete treatment in tragedy

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ளது ராங்கியம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் கிருஷ்ணவேனி. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துவருகிறார். அந்த மருத்துவமனையில்தன்னை பரிசோதனை செய்துகொள்ள வந்த ஒரு பெண்ணுக்கும், கிருஷ்ணவேணிக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் பெண்ணாடம் அருகேயுள்ள கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். 27 வயது நிரம்பிய பெண், தனக்கு திருமணம் ஆகாத நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி அந்தக் கருவைக் கலைப்பது சம்பந்தமாக கிருஷ்ணவேணியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

Advertisment

இதையடுத்து கிருஷ்ணவேணி, ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணன்காரன் குப்பம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அந்தப் பெண்ணை வரவழைத்து அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரியவந்துள்ளது. அங்கு அந்தப் பெண், பெற்றோருக்கு தெரியாமல் தனது ஆண் நண்பருடன் வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கிருஷ்ணவேணி அந்தப் பெண்ணுக்கு டாக்டர் பரிந்துரை இல்லாமல் தன்னிச்சையாக உறவினர் வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனால் ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்தப் பெண்ணை ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த அந்தத் தனியார் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வழிமுறை தெரியாமல் கருக்கலைப்பு செய்ததால் அந்தப் பெண்ணுக்கு ரத்தப் போக்கு அதிக அளவில் இருந்த நிலையில், அந்தப் பெண்ணை அரசு மருத்துவமனையில் விட்டுவிட்டு அவருடன் வந்த ஆண் நண்பர் தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இதையடுத்து கருக்கலைப்பு செய்துகொண்ட அந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் ஆண்டிமடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த செவிலியரைப் போலீசார் தேடிப் பிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர். தப்பி ஓடிய அந்த ஆண் நண்பரை போலீசார் மிகத் தீவிரமாக தேடிவருகின்றனர். தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் கருவுற்ற அந்த இளம்பெண், அதைக் கலைத்துவிடுவதற்காக தனது ஆண் நண்பருடன் ரகசியமான முறையில் அந்த செவிலியர் பெண்ணை நம்பி மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தவறான முறையில் கருக்கலைப்பு செய்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.