ADVERTISEMENT

கூண்டை விட்டு வெளியே வந்த 'அரிசி ராஜா!'

07:35 PM Jul 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில் நவமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 'அரிசி ராஜா' எனும் காட்டு யானை தொடர் அட்டகாசம் செய்து வந்த நிலையில், 6 வயது சிறுமியையும், மாகாளி என்பவரையும் கொன்றது. அதனைத் அடுத்து வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்ட அந்த யானை மீண்டும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்ததால் வனத் துறையினர் போராடி அரிசி ராஜாவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கோவை வரகளியாறு பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். வளர்ப்பு யானையாக மாற்ற வனத்துறையினர் அதனைக் கூண்டில் அடைத்து வைத்திருந்த நிலையில், பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 9 மாத பயிற்சிக்குப் பிறகு தற்போது அரிசி ராஜா கூண்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. அரிசி ராஜா பாகனுக்கு கட்டுப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT