ADVERTISEMENT

‘பாயசத்திற்கு சண்டையா...!’ - கலவர பூமியாக மாறிய நிச்சயதார்த்த நிகழ்வு 

09:16 AM Jun 05, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீர்காழி அருகே பாயசம் சரியில்லை என்று கூறி இரு தரப்பினரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்று நடைபெற்றுள்ளது. விழாவை முடித்துவிட்டு அனைவரும் சாப்பிட அமர்ந்துள்ளனர். அப்போது சாப்பாட்டில் பாயசம் சரியில்லை என்று கூறி பெண் வீட்டார் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவதாம் முற்றிப்போக இரு வீட்டாரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நிச்சயதார்த்தத்தில் பாயசத்திற்காக அடித்துக்கொண்ட சம்பவம் விழாவிற்கு வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT