Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி: 13 குடும்பத்தினருக்கு, ரூ 13 ஆயிரத்தில் நிவாரணம்!! 

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

கடந்த 20 ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் சாலை ஓரத்தில் பசியும் பட்டினியுமாக, 13 குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் என்ற தலைப்பில் செய்தி, படங்களுடன் பதிவு செய்யப்பட்டிருந்தது.


இந்த செய்தி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிய நிலையில், செய்தியை பார்த்த சீர்காழியை சேர்ந்த சமூக ஆர்வலர் யாமினி அழகுமலர் என்பவர் நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சார் குடுகுடுப்பைக்காரர்கள் செய்தியை பார்த்தேன், மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  எனவே அவர்களிடம் பேங்க் அக்கவுண்ட் இருக்கா என்று கேளுங்கள் அப்படி இல்லை என்றால் உங்களது பேங்க் அக்கவுண்ட் நம்பரை அனுப்பி வையுங்கள் என்றார்.

 

Nakkeeran's news effect ; Rs 13,000 relief for 13 family members


பின்னர் அவருக்கு அக்கவுண்ட் நம்பரை அனுப்பிய அடுத்த நிமிடமே ரூ13000 வங்கி கணக்கில் போட்டுள்ளோம். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் ஆயிரத்தில் தேவையான அரிசி, மளிகை, காய்கறி பொருட்களை வாங்கி கொடுங்கள் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து நாம் சிதம்பரத்திலுள்ள பத்திரிகை நண்பர்கள் ரமேஷ் மற்றும் ராஜி உதவியால் அவர்களுக்கு தேவையான பொருட்களை பல கடைகளில் ஒவ்வொன்றாக வாங்கினோம். வாங்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதியான பிச்சாவரம், கீழ் அனுவம்பட்டு என்ற ஊரின் சாலையின் மரத்தடி நிழலுக்கு சென்று 13 குடும்பத்திற்கும் தனித்தனியாக 10 கிலோ அரிசி, மளிகை பொருள், காய்கறிகள் என வழங்கினோம்.
 

 nakkheeran app



இதனை பெற்ற குடுகுடுப்பைக்காரர்கள், கொடுத்தவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது ஆனால் அவர்களிடத்தில் கூறுங்கள், நாங்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினோம் என்று என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் யாமினி அழகுமலர் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பொதுமக்களை படாதபாடுபடுத்தியது அப்போது நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து விவசாய தோழமை இயக்கம் (farmer friendly initiative)  என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்.  அவர்களிடத்தில் இந்த செய்தி குறித்து பேசினேன் அவர்கள்தான் உடனே பணத்தை அனுப்பினார்கள் என்றார்.

 

Nakkeeran's news effect ; Rs 13,000 relief for 13 family members


பின்னர் இயக்கத்தின் தலைவர் சிவராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசுகையில், கடந்த 2015 இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சென்னையை சேர்ந்த நாகர்ஜுனா, இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகம் பயின்றவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் வாட்சப் மூலம் அறிமுகமே இல்லாதவர்கள் ஒத்த கருத்துடன், எட்டு பேர் கொண்ட குழுவாக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் அவர் தற்போது கனடாவிலிருந்து  இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.

தற்போது இந்த இயக்கத்தின் தலைவராக நான், செயலாளராக எட்வின், பொருளராக ராஜேந்திரன் உள்ளோம். இதேபோல் தற்போது இந்த குழுவில் தமிழகம் முழுவதும் 170 பேர் உள்ளனர். இதில் யாரும், யாரையும் பார்த்து கொண்டது கிடையாது. வாட்சப் மூலம் இரவு 9 மணிக்கு மேல் தகவல்களை பகிர்ந்துகொள்வோம். இதுபோல் வளர்ந்ததுதான் இந்த இயக்கம். இன்னும் பதிவுகூட செய்யவில்லை.  

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை அவ்வப்போது சரிசெய்வது, அவர்களுக்கு உரம் கிடைக்காமல் இருந்தால் பெற்றுத்தருவது, மின்வசதி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி வாங்கி தருவது, மேலும் இயற்கை விவசாயம் செய்தால் என்ன நன்மை என விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவிகள்  செய்வது ஆகியவற்றை செய்து வருகிறோம். வாய்கால்கள் துர்ந்து இருந்தால் தூர்வாரி தண்ணீர் வர வைப்பது. குளங்களை தூர்வாரி தண்ணீர் தேக்கிவைப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறோம்.

மேலும் கஜா புயலில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ரூ 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை பெற்று புயலால் பாதித்த ஏழைமக்களுக்கு உதவி செய்தோம். புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் இருந்த பணப்பயிர்களான தென்னை, பலா, வாழை, புளியமரம் உள்ளிட்டவை சேதமடைந்தது, அதனால் ஒவ்வொரு வீட்டுக்கும் பலா, தென்னை, உள்ளிட்ட மரக்கன்றுகளை ஒரு கோடி இலக்கு என நிர்ணயித்து வழங்கி வருகிறோம்.

 

Nakkeeran's news effect ; Rs 13,000 relief for 13 family members


தற்போது கரோனா தொற்று காரணமாக எந்த உதவியும் இல்லாமல் வீட்டில் முடங்கி  இருக்கும் தினக்கூலி, ஏழைகள், அரசு உதவிகள் கிடைக்காத வெளிமாநிலத்தவர், மனவளம் குன்றியவர்கள் என அடையாளம் கண்டு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ1,000 வழங்கி வருகிறோம். நாங்க செய்யும் செயலின் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகிறார்கள். இந்த ஊரடங்கில் ரூ4 லட்சம் வரை கொடுத்துள்ளனர். அதில் ரூ 3 லட்சம்வரை ஏழை குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம்.

குறிப்பாக சிதம்பரம் அருகேயுள்ள சி. கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் மல்லிகா, வைரம், ரஜேஸ்வரி, சாந்தி, ஜமுனா உள்ளிட்ட ஆறு பேர் ஆதரவற்றவர்கள் என சேவையாளர்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர்களின் வசிப்பிடத்தை ஆய்வு செய்து அவர்களின் குடும்பத்திற்கு தலா ஆயிரம் உதவி செய்துள்ளோம். அதேபோல் இந்த 13 குடுகுடுப்பைகாரர்களுக்கும் உதவி செய்துள்ளோம். இதேபோல் தமிழக அளவில் ஏழை குடும்பங்களை அடையாளம் கண்டு வழங்கி வருகிறோம். இன்னும் கொடுக்க உள்ளோம்.

மேலும் வங்கி கணக்கில் காசு கொடுத்தால் அவர்களால் ஒன்னும் செய்யமுடியாத நபர்களுக்கு நேரடியாக உணவுப் பொருள் வாங்கி கொடுக்க ஏற்பாடுகளை செய்கிறோம். பாதிக்கப்படுபவர்களை நமக்கு அடையாளம் காட்டுங்கள், அவர்களுக்கு உதவி செய்ய தயராக இருக்கிறோம் என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரை ஒதுங்கிய மர்மப் பொருள்; பதற்றத்தில் மீனவ கிராமம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Mysterious object washed ashore in Sirkazhi; A fishing village in tension

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் 'அபாயம் தொட வேண்டாம்' என  ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றுள்ளனர் போலீசார். இது அந்த மீனவ கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.