ADVERTISEMENT

"இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம்"- தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்!

06:58 PM Mar 24, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்- 4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் எனத் தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (24/03/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்- 4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். குரூப்- 4 தேர்வுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT