Skip to main content

''வியாபம் ஊழலை போன்றது தான் டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு''- சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி   

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகா்கோவிலில் நடந்த பத்திாிகையாளா்கள் சந்திப்பில்.... நாடாளுமன்றத்தில் நேற்று (1-ம் தேதி) குடியரசு தலைவா் உரையில் காந்தி சொன்னதன் அடிப்படையில்தான் அவாின் கனவை நிறைவேற்றும் விதமாக குடியுாிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றாா். குடியரசு தலைவாின் இந்த கூற்று காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்ததற்கு சமம்.

 

Interview with CBM G.Ramakrishnan


1955-ல் குடியுாிமை தொடா்பான பிரச்சினைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் மற்ற மாநிலங்களுக்கு தேவையற்றது. உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் அஸ்ஸாமில் மட்டும் தான் அமல் படுத்தப்பட்டுள்ளது. திடீரென்று அரசு இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களில் கொண்டு வரும்போது தான் எதிா்க்கபடுகிறது. குடியுாிமை வழங்க மதத்தை ஒரு அளவுகோலாக வைக்ககூடிய புதிய ஷரத்தை ஆா்.எஸ்.எஸ், பாஜகவின் அஜெண்டாக கொண்டு வருகின்றனா்.

டிஎன்பிஎஸ்சி குருப்-2,4 தோ்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதின் தகவல்களை பாா்க்கும் போது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் 15, 20 வருடமாக நடைபெற்ற வியாபம் எனும் மிகப்பொிய ஊழலை போன்றது தான் இந்த குருப் தோ்வு முறைகேடு. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு குழந்தைகள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய மருந்துகளின் விலைகளை கம்பெனிகள் தாறுமாறாக உயா்த்துவதை கட்டுப்படுத்த மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் இருந்தது. அந்த  சட்டம் தேவையில்லை என கூறியுள்ளனா். இந்தியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத திண்டாட்டம், 40 ஆண்டுகளில் இல்லாத மக்களின் வாங்கும் சக்தி குறைவு அதிகாித்துள்ளது என்றாா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.