திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமமுகவின் செயலாளர் காரில் இருந்து 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த சேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்முகம் என்பவரின் சோதனை செய்த போது உரிய ஆவணமின்றி 16.85 லட்சம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை வாழப்பாடி கோட்டாட்சியர் அலுவலர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.