ADVERTISEMENT
ADVERTISEMENT
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 50- ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினருமான M.D.குலாம் மொய்தீன் மாற்றுத்திறனாளிகளின் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு 50க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலசுப்பிரமணியம், ஆறுமுகம், முபாரக் அலி, மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள் படக்கடை சீனிவாசன், சேட்டு, இக்பால், பூக்கடை சோமு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Show comments