இந்த சம்பவம் குறித்து, ஆனந்தன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘சேண்பாக்கம் பகுதியில் எனக்கு சொந்தமான நீச்சல் குளம் இருக்கிறது. இதனால், அதே பகுதியை சேர்ந்த, அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ், தலைமையிலான 4 பேர் அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர். அவர்களை நான் கண்டித்ததற்கு அந்த 4 பேர், என்னுடைய கடைக்கு வந்து என்னை தாக்கி, கடையை சேதப்படுத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நகைக்கடை உரிமையாளர் தாக்கப்பட்டதால், காந்தி நகர் பகுதியில் உள்ள நகை கடைகள் அடைக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நகைக்கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தெரிவித்தனர்.