ADVERTISEMENT

"தஞ்சை தேர் விபத்து: அதிமுக சார்பில் நிதியுதவி அறிவிப்பு 

11:15 AM Apr 27, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று தொடங்கியது.

விழாவின் ஒரு பகுதியாக, நேற்று இரவு மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து வீதி உலாவாக கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தத் தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என அதிமுக சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலினும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடியும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT