ADVERTISEMENT
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளி டி.டி.கே. சாலை அருகே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், திமுகவினர் தங்களை அடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்தப் போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments