Skip to main content

திருச்சியில் 14 ஒன்றிய சேர்மன் பதவிகளை கைப்பற்றும் தி.மு.க.

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 14. இதில் ஒன்றிய வார்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 241. தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும்.

 

kn nehru dmk



திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.
 

திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், சுயேச்சைகளுக்கு 3 இடங்களும், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள 17 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 3 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும் கிடைத்துள்ளன.


 

வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 15 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 3 வார்டுகளும் கிடைத்துள்ளன.
 

முசிறி ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைக்கு ஒரு வார்டும், தொட்டியம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், தாத்தையங்கார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 வார்டுகளும், சுயேச்சை களுக்கு 5 வார்டுகளும் கிடைத்து உள்ளன.


 

இந்த 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 11-ந்தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றுகிறது.
 

லால்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். சுயேச்சைகள் ஆதரவுடன் அ.தி.மு.க. தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி வருகிறது. ஆனால் இந்த லால்குடி திமுக மா.செ. கே.என்.நேருவின் சொந்தவூர் என்பதால் அதிமுகவின் முயற்சியை கே.என். நேரு சுயேச்சைகளின் ஆதரவை பெற்றுவிட்டார் என்கிறார்கள்.
 

துறையூர் ஒன்றியத்திலும் நடந்து உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 9 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், 2 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இங்கும் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிப்பதற்கான முயற்சியில் தி.மு.க. தீவிரமாக இறங்கி உள்ளது.
 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களை தி.மு.க. எளிதாக கைப்பற்றி உள்ளது. 2 ஒன்றியங்களில் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர் பதவியை பிடிப்பதற்கான முயற்சிகளை செய்து முடித்து விட்டது. இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு ஒரு ஒன்றியம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த கால கட்டங்களில் கூட அ.தி.மு.க. மணிகண்டம் உள்ளிட்ட சில ஒன்றியங்களில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. ஆனால் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் ஒரு ஒன்றியத்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு சரிவு ஏற்பட்டு இருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.