ADVERTISEMENT

‘நாளை முதல் விருப்ப மனு விநியோகம்’- அதிமுக

01:36 PM Sep 21, 2019 | santhoshkumar

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என சில வாரங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுடையோர் விருப்பமனுவை வாங்கி தாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியகியுள்ளது. நாளை காலை பத்து மணியிலிருந்து அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 25ஆயிரம் பணம் செலுத்தி விருப்ப மனுவை வாங்கி, வருகின்ற 23ஆம் தேதிக்குள் மனுவை பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT