மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ADVERTISEMENT
"ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது கொடுத்துள்ளதை ஒரே மாதிரியாகத் தான் பார்க்கிறேன். அரசியல் ரீதியாகவும் சரி.. நண்பர் என்ற வகையிலும் சரி. தற்சமயம் ரஜினிகாந்த் அவர்களுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை .. பின்னாளில் எனக்கும் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
ADVERTISEMENT
எனது தந்தை சிலையை நான் வேறு எங்கும் வைக்கவில்லை எனது இல்லத்தில் தான் வைத்துள்ளேன். யாருக்கும் இடைஞ்சலாக பொது இடத்தில் வைக்கவில்லையே? அது மட்டுமல்ல எனது தந்தையின் சிலை, வழிபாட்டு சிலை அல்ல." என்றார்.
Show comments