முதல்வரின் கரோனா தடுப்பூசி அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,'நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்; இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்; ஐயா ஆட்சியாளர்களே, தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து. மருந்து என்பது அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல; மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்டீர்கள். மக்கள் உயிருடன் விளையாடத் துணிந்தால் உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.