46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ஆவடியை அடுத்த வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மூன்றாம் பட்டாலியனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
60- க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 50- க்கும் மேற்பட்ட கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் தங்கம், வெள்ளி உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகர் அஜித்குமார் பதக்கங்களைப் பெறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.