ADVERTISEMENT

'மாணவர்களை ஏற்றாத பேருந்து நடத்துநர்கள் மீது நடவடிக்கை'-போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!  

08:47 AM Jul 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாணவர்கள் பேருந்தில் ஏற்றாத பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பேருந்துகளில் அனுமதிக்காமல் பள்ளி, கல்லூரி மாணவர்களை இறக்கி விட்டால் பேருந்து நடத்துநர் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சீருடை அல்லது 2019-20 ல் தந்த பேருந்துக்கான இலவச பயணத்திற்கான பஸ் பாஸ் வைத்திருந்தால் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். மாணவர், கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய அடையாள அட்டை வைத்திருந்தாலும் அவர்களை இலவசமாக பயணிக்க பேருந்து நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT