தமிழகம் முழுவதும் நாளை (27/03/2020) அதிகாலை 03.30 மணி முதல் 09.00 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என்றும், பால் முகவர்களின் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பால் முகவர் மற்றும் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்குப் பால் விநியோகம் செய்யமாட்டார்கள் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுப்பாடின்றி ஆவின் பாலகங்களில் கிடைக்கும் எனவும், பால் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Show comments