ADVERTISEMENT

நூதன முறையில் கடத்திவரப்பட்ட 8 கிலோ தங்கம்!

03:34 PM Jul 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இன்று (03.07.2021) அதிகாலை 4:30 மணி அளவில் கோவை பீளமேடு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த 6 பேரிடம் குடியுரிமை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் பேஸ்ட்டில் தங்கத்தைக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் கோவை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்த 8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இதைக் கடத்திவந்த ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், டெனி இப்ராஹீம் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT