ADVERTISEMENT

இளம்பெண் வீடியோ மிரட்டல்... ஆறு மாத தொடர் பலவந்தம்! - பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது!

07:50 PM Mar 21, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


பள்ளிகளில் பயிலும் டீன்-ஏஜ் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, ஆளில்லாத இடத்தில் அமர்ந்து செல்போனில் ஆர்வமாக வீடியோ பார்க்கிறார்கள் என்றால், அவர்கள் மீது பெற்றோர் தனிக் கவனம் செலுத்தவேண்டும் என்பதை, விருதுநகரில் நடந்த பாலியல் குற்றச்சம்பவம் உணர்த்துகிறது. என்ன நடந்தது?

ADVERTISEMENT


விருதுநகர் – பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் 22 வயது ராகசுதாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் காதலிப்பது போல் பழகுகிறான். கார்மென்ட்ஸ் ஒன்றில் பணிபுரியும் அவளை, கடந்த 20-8-2021-ல் பெத்தனாட்சி நகரிலுள்ள தனது மெடிக்கல் குடோனுக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, அச்சம்பவத்தை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளான். அவளுடன் நெருங்கிப் பழகிய வீடியோவை, தனது நண்பர்கள் பிரவீன் மற்றும் ஜுனைத் அகமதுவிடம் குஷியுடன் காட்டியிருக்கிறான். அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஹரிஹரனிடம் நடந்துகொண்டதைப் போல, தங்களிடமும் நடந்துகொள்ள வேண்டுமென்று அவளிடம் வற்புறுத்தி, சம்மதிக்காவிட்டால் வாட்ஸ்-ஆப் மற்றும் பேஸ்-புக்கில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், 7 பேர் தன்னைத் தொடர்ந்து பலவந்தப்படுத்தி வருவதை, டிரைவர் வேலை பார்க்கும் மாடசாமியிடம் எடுத்துச்சொல்லி, காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள்.

மாடசாமியோ, அந்த பலான வீடியோவை தனது செல்போனுக்கு ஃபார்வேர்ட் செய்துகொண்டு, ‘அந்த 7 பேரிடம் பழகியதைப் போல என்னிடமும் பழகவேண்டும். மறுத்தால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்.’ என்று மிரட்டி, கடந்த 20-ஆம் தேதி அவளுடைய வீட்டில் வைத்தே பாலியல் அத்துமீறலை நடத்தியிருக்கிறான். உதவ வேண்டிய மாடசாமியும் மிரட்டி, அதே தவறைச் செய்ததால் விரக்தியுற்ற அவள், கடந்த 6 மாத காலமாக வீடியோவைக் காட்டி மிரட்டி, 7 பேர் தன்னைத் தொடர்ந்து சிதைத்து வந்ததையும், மாடசாமியின் அத்துமீறலையும் குமுறலுடன் புகாராக எழுதி, விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் கொடுத்துவிட, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு பதிவாகி ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரிஹரனும் ஜுனைத் அகமதுவும் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள்.


அந்த மாணவர்களின் பெற்றோர், மகன்களின் தகாத செயலையும் எதிர்காலத்தையும் எண்ணிக் கலங்கி அழ, அவளோ - காதலின் பெயரால் அத்துமீறி பழகி, பேராபத்தில் சிக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT