ADVERTISEMENT

காதல் ஜோடி தங்கியிருந்த வீட்டில் 7 லட்ச ரூபாய் கள்ளநோட்டுகள்!

05:52 PM Oct 31, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார்கள். அந்தப் பெண்ணின் வீட்டார் தங்களது மகளைக் காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கோவை சேரன் மாநகரில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார், பீளமேடு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து அவர்களுடன் குறிப்பட்ட வீட்டிற்கு நேரில் சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்து எல்லோரும் ஓடி விட்டனர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பீளமேடு போலீசாரும், புதுக்கோட்டை போலீசாரும் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் 4 கட்டுகள் இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதை எண்ணிப் பார்க்கும்போது, 7.5 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

பணத்தைக் கைப்பற்றிய போலீசார், சேரன் மாநகர் வீட்டில் தங்கியிருந்த புதுகோட்டை காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT