ADVERTISEMENT

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

11:08 PM Aug 14, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் அண்மையாகவே ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து வரும் நிலையில், தற்போது ஏழு ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி, மாநில குற்ற ஆவணக் காப்பக எஸ்.பி கலைச்செல்வன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார பிரிவு எஸ்.பி மகேஸ்வரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை இணை ஆணையர் ஆரோக்கியம், மத்திய குற்றப்பிரிவு III-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் ஸ்டாலின், மத்திய குற்றப்பிரிவு I-க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு - I இணை ஆணையர் நாகஜோதி குற்ற ஆவணக் காப்பகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர இணை ஆணையர் ராஜராஜன் கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் மதிவாணன் சேலம் தெற்கு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT