ADVERTISEMENT

ஆற்றில் குளித்த 7 சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு... கடலூரில் சோகம்!

01:58 PM Jun 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கெடிலம் ஆற்றில் குளித்த 7 சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் 7 சிறார்கள் குளித்துக் கொண்டிருக்கையில் நீரில் மூழ்கினர். உடனடியாக ஏழு பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறார்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் மனதை கலங்கவைக்கிறது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று நெல்லை மாவட்டம் லெப்பைக்குடியில் காரில் விளையாண்டு கொண்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஒரே நேரத்தில் 7 சிறார்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் விவரம் சங்கீதா(16), மோனிஷா(16), திவ்யதர்ஷினி(10), பிரியதர்ஷினி(15), நவநிதா(18), சுமந்தா(18), பிரியா(18).

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT