Skip to main content

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... ஒருவர் கைது!

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

 

 6-year-old girl sexually assaulted and killed ... one arrested!

 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் பன்னிமடையை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 26ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டடு  கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது. இது வெறும் கொலை அல்ல சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என  பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

 

 6-year-old girl sexually assaulted and killed ... one arrested!

 

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் பிடிக்க வேண்டும் என மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனங்கள் எழுந்த வந்தது. இதற்காக போராட்டங்களும் துடியலூர் சிக்னலில் நடைபெற்றது. ஆனால் போலீசார் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கொடுத்த வாக்குறுதி அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதேபோல் சிறுமியின் பெற்றோர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றுக்கொண்டனர்.

 

 6-year-old girl sexually assaulted and killed ... one arrested!

 

ஆனால் அதற்கு அடுத்த நாளே இந்தக் கொலை வழக்கில் எளிதில் துப்பு துலக்க முடியாததால் காவல் துறை சார்பாக ஒரு நோட்டீஸில் வெளியிடப்பட்டது. அதில் இந்த கொலை தொடர்பாக துப்பு கொடுக்கப்பட்டால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் துப்பு கொடுத்தவர் பற்றிய விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.மேலும் 10 பேர் கொண்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

 

mm

 

இந்நிலையில் இந்த வழக்கில் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சந்தோஷ் சிறுமியை பாலியல் கொடூரம் செய்து கொலை செய்தது நான்தான் என ஒப்பு கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.