ADVERTISEMENT

ஆட்டோ மீது மோதிய அரசுப் பேருந்து; 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு 

05:14 PM May 04, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று புதுச்சேரியை நோக்கி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கல்பாக்கத்தில் இருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியுள்ளது. அதில் ஆட்டோ நொறுங்கியதில் அதில் பயணித்த 3 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT