ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்று ஐந்தாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுகவின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. இந்நிலையில் அதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார் தமிழக முதல்வர்.
Show comments