ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வனச்சரக அலுவலர் கந்தசாமிக்கு வந்த தொலைபேசி தகவலில் சோளிங்கர் அடுத்த பானாவரம் காப்புக்காடு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதன் அடிப்படையில் வனத்துறையினர் நடத்திய தேடல் வேட்டையில் காப்புக்காட்டில் ஒருபகுதியில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.
அதனை கைப்பற்றி தங்களது அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அதன் மொத்த எடை 3 டன் எனக்கூறுகின்றனர். இந்த செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments