Skip to main content

"இவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழவில்லை... பாட்டுப்பாடி வாழ்த்தும் குற்றவாளிகள்... மாற்றியோசிக்கும் சென்னை போலீஸ்.!"

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

கடந்த ஆண்டு ஜூலை 2-ந்தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில், முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை கத்தியால் கொடூரமாக தாக்கினான் ரவுடி ஆனந்த். இந்த சம்பவம் நிகழ்ந்த 48 மணிநேரத்தில் ஆனந்த்தை என்கவுன்டர் செய்தது சிட்டி போலீஸ். ஆனந்தை பிடிக்க முயன்ற தனிப்படை போலீஸாரை தாக்க முயன்றதால், வேறு வழியில்லாமல் தற்காப்புக்கு சுட்டதாக விளக்கம் அளித்தது சென்னை காவல் துறை.

 

 "They are not slipping in the bathroom. "They are not slipping in the bathroom.


இந்நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தின் முதலாமாண்டு நினைவு தினம் என்பதால், அவனது நண்பர்கள் 'டிக்டாக்' வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மயிலாப்பூர் கைலாசபுரம் இடுகாட்டின் பின்னணியில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என கானா பாடல் பாடி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.

 

 "They are not slipping in the bathroom.


இதையடுத்து, வீடியோவில் இடம்பெற்ற சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா என 6 பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர். வழக்கமாக இதுபோன்ற குற்றவாளிகள் கைதுஆகும் போது, மறுநாள் கையில் 'மாவுக்கட்டுடன்' புகைப்படம் வெளியாகும். விசாரிக்கும்போது காவல் நிலையத்தின் பாத்ரூமில் 'வழுக்கி' விழுந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படும். 

ஆனால், இந்த 6 பேருக்கும் மாவுக்கட்டு போடவில்லை. அதற்கு பதிலாக, போலீஸை வாழ்த்தி கானாபாட்டு பாடச் சொல்லி வித்தியாசமாக ட்ரீட் பண்ணி உள்ளனர் ராயப்பேட்டை போலீஸார். இதன்படி 6 பேரும் கோரஸாக பாடிய வாழ்த்து பாட்டில் "போலீஸார் எல்லாம் நம் நண்பர்கள்... அவர்கள் இல்லாவிட்டால் ஊரே சுடுகாடாகும்" என்று வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

ஆக... மரண பயத்தை காட்டிவிட்டார்கள் போல...வித்தியாசமாக இருக்குது சென்னை சிட்டி போலீஸின் அணுகுமுறை! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.