ADVERTISEMENT

சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள்- அரசாணை வெளியீடு!

08:05 PM Jan 13, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூன்று இடங்களில் ரூபாய் 335 கோடி மேம்பாலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு இன்று (13/01/2022) அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணையில், "கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு மேல் ரூபாய் 142 கோடி மதிப்பில் 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அதேபோல், கொன்னூர் நெடுஞ்சாலை- ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பில் ரூபாய் 62 கோடியில் 120 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமையவுள்ளது. தெற்கு உஸ்மான் சாலை- சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலையில் ரூபாய் 131 கோடியில் கட்டப்பட உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT