இது குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, " உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகள் மட்டும் வர்த்தக நிறுவன கட்டிடங்களுக்கான வரி விகிதத்தை 100 சதவீதம் அளவில் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நிறைய புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், இந்த அதிர்ப்தி அரசுக்கு எதிராகத் திரும்பலாம். அதனால், வரி உயர்வுக்கு முந்தைய நிலையே தொடர்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடைமுறையை இரு பகுப்பாகப் பிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கல்வி சார்ந்த விசயங்கள் ஒரு பகுப்பாகவும், ஆராய்ச்சி மற்றும் கல்வி சாராத விசயங்கள் மற்றொருப் பகுப்பாகவும் பிரிக்கவிருக்கிறார்கள். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது " என்று அமைச்சரவை கூட்டத்தின் விவாதங்களை சுட்டிக்காட்டுகிறார்கள் உயரதிகாரிகள்.