ADVERTISEMENT

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் சந்தேகம்தான்- தமிழிசை சவுந்தரராஜன்!!

11:10 PM Dec 02, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இருபது தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவது என்பது சந்தேகம்தான் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற பாஜக சிறப்பு செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

அந்த நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது,

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இத்தருணத்தில் தமிழகத்தில் 20 இடங்களிலும் இடைத் தேர்தல் நடைபெறுவது என்பது சந்தேகம்தான். ஐந்து மாநிலங்களின் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறும் என்றும் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT